கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
(கண்கள் இரண்டால்)
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
( கண்கள் இரண்டால் )
கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)
படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: தீபா மிரியம், பெல்லி ராஜ்
Friday, July 25, 2008
என்னக்கு பிடித்த பாடல்கள்
எனக்கு பிடித்த சினிமா பாடல்கள் (2008)
1.முகுந்தா முகுந்தா
2.கண்கள் இரண்டால்
3.அடடா அடடா எனை ஏதோ
1.முகுந்தா முகுந்தா
2.கண்கள் இரண்டால்
3.அடடா அடடா எனை ஏதோ
Wednesday, July 23, 2008
எண்ணங்கள் """>""<":":"<>:":"
இப்பொழுது புதியதாக நானும் ப்ளாக் எழுத ஆரம்பித்து விட்டேன் . என்னால் முடிந்தவரை என் எண்ணங்களை எல்லோரிடமும் பகிரிந்து கொள்வேன். இந்த ப்ளாக் எழுத காரணமாக இருந்த என்னுடய சிநேகிதி நித்திலா விற்கு நன்றி.
வர்ணம் அழகானது அதிலும் நம்முடைய எண்ணம் வர்ணமாக தோன்றினால்
மிகவும் அழகாக இருக்கும். இதை எண்ணாமலேயே என் ப்ளாக் இற்கு என்னவர்னம் என்று பெயர் வைத்தேன்.
எதையும் மாத்தி யோசிக்கும் மனம் வேண்டும் என்று நான் யோசிப்பேன்,,,,,,,,,
வர்ணம் அழகானது அதிலும் நம்முடைய எண்ணம் வர்ணமாக தோன்றினால்
மிகவும் அழகாக இருக்கும். இதை எண்ணாமலேயே என் ப்ளாக் இற்கு என்னவர்னம் என்று பெயர் வைத்தேன்.
எதையும் மாத்தி யோசிக்கும் மனம் வேண்டும் என்று நான் யோசிப்பேன்,,,,,,,,,
Subscribe to:
Posts (Atom)
